நீண்டகால பணப்பயிர் மற்றும் தொடர்ச்சியான வருமானத்தை வழங்கும் வேளாண்மையில் பாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பாக்கு மரத்தின் வேர்களை பாதுகாக்கவும் அதன் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆர்கானிக் கோகோமேக்ஸ் இடுபொருளை பயன்படுத்தலாம்.
கோகோமேக்ஸ் பயன்படுத்தும் முறை:
கோகோமேக்ஸ் உங்களது பாக்கு மரத்தின் வேர்களை பாதுகாத்து மண்ணின் தன்மையை மேம்படுத்துகிறது. வேர்களின் ஊட்டச்சத்து குறைபாடு, அழுகல், பூஞ்சைகளின் தாக்குதல் மற்றும் முழுமையான பாதுகாப்பினை வழங்கி மரத்தின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் நிலையான அதிக உற்பத்தியையும் பெற முடிகிறது. வேர்களின் வளர்ச்சி முறையாக பாதுகாக்கப்படும் போதுதான் மரத்தின் ஆரோக்கியம் மற்றும் உறுதி அதிகரித்து ஊட்டச்சத்துக்களை முழுமையாக கடத்துகிறது. மேலும் கோகோமேக்ஸ் ஆனது மண்ணின் தன்மையை இலகுவாக மாற்றுவதன் மூலம் அதிக தூரம் வேர்கள் பரவுவதற்க்கு ஏதுவாக அமையும்.
முதல் முறை கோகோமேக்ஸ் பயன்படுத்தும் போது ஒரு மரத்திற்கு மாதம் ஒரு முறை 100 மில்லி வரையிலும் , ஏக்கருக்கு மொத்தமாக பயன்படுத்தும் போது 4-6 லிட்டர் வரையிலும் பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களை மரங்களை சுற்றி வட்டமாக குழிகள் ஏற்படுத்தி அதில் போட்டு வெயில் படாமல் மூடி தண்ணீர் நன்றாக பாய்ச்ச வேண்டும்.
அப்போதுதான் மரங்களுக்கு முழுமையான பலன்கள் கிடைக்கும். பிரதி மாதம் இயற்கையான உரங்களை பயன்படுத்த முடியாதவர்கள் 3-4 மாதங்களுக்கு ஒரு முறையாவது 5-6 கிலோ வரையிலான இயற்கையான பசுந்தாள் உரங்களை பயன்படுத்த வேண்டும். புதிதாக வைத்த இளம் செடிகளுக்கு மாதம் ஒரு முறை 25 மில்லி விதமும், இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ள பெரிய மரங்களுக்கு 50 மில்லி விதமும் (மாதம் ஒரு முறை 30 நாட்களுக்குள்) தவறாமல் 12 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது தான் பாக்குமரத்தில் முழுமையான பலன்களை காண முடியும்.
விளைச்சலில் முழுமையான பயன்களை அடைய பாக்கு மரங்களை தொடர்ந்து நன்றாக பராமரிப்பது அவசியம் ஆகும். 4 மாதங்களுக்கு பிறகு ஒரு மரத்திற்கு ஒரு மாதத்திற்கு 50 மில்லி வீதமும் ஏக்கருக்கு 4 -6 லிட்டர் விதமும் கோகோமேக்ஸ் பயன்படுத்தலாம்.






.png)







